”நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் துஆ அங்கீகரிக்கப் படும். ”
(திர்மிதி3668,) (அஹ்மத், 2305)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலே இடம்பெறும் இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் அல் முதனீ என்பவரும், வேறு சில அறிவிப்புக்களில் அபூ முத்லா என்பாரும் இடம் பெறுகிறார்கள்.இவ்விருவரும் யாரென்றே அறியப்படாதவர்கள் ஆவர்.
பொதுவாக துஆ அங்கீகரிக்கப் படும் நேரங்களில், நோன்பாளியின் துஆவும் அடங்கும் என்று ஹதீஸகளில் இருப்பதால் நோன்பிருந்ததி (ஸஹரி)லிருந்து இப்தார் வரைக்கும் துஆ ஏற்றுக் கொள்ளப் படும் நேரம் என்பது குறிப்பிடத் தக்கது.
மூன்று பேரின் துஆ ஏற்கப்படத்தக்கவை.,
1. நோன்பாளியின் துஆ
2. அநீதம செய்யப்பட்டவனின் துஆ.
3. பயணியின் துஆ.
(அல்பானி ஸஹீஹுல் ஜாமிஃ 3030)
எனவே, நோன்பு திறக்கும் நேரம் என்று குறிப்பிட்டு வருகின்ற வார்த்தைதான் பலஹீனமானதே தவிர நோன்பாளியின் துஆ, துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களில் ஒன்றுதான் என்பதை சரியாக விளங்கிக் கொள்வோமாக.